ஆலந்தூர்: ஆலந்தூர் தெற்கு பகுதி 167வது வட்ட திமுக சார்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி 1,000 பேர் பங்கேற்ற பிரமாண்ட கோலப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நங்கநல்லூர் ஸ்கேட்டிங் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்தது. 167வது வட்ட திமுக செயலளார் ஜெ.நடராஜன் தலைமை வகித்தார். ஆலந்தூர் மண்டலக்குழு தலைவர் என்.சந்திரன், வார்டு கவுன்சிலர் துர்காதேவி நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் தா.மோ.அன்பரசன், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கலந்துகொண்டு, கோலப்போட்டியில் வெற்றி பெற்ற 16 பேருக்கு தங்க நாணயங்கள், 814 பேருக்கு ஹாட்பாக்ஸ் வழங்கி சிறப்புரையாற்றினர்.
இதில் மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் சாய்ஜெய்காந்த், இலக்கிய அணி அமைப்பாளர் ஜெயராம் மார்த்தாண்டன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்இப்ராகிம், பகுதி நிர்வாகி பாபு, மாமன்ற உறுப்பினர்கள் தேவி ஏசுதாஸ், பூங்கொடி ஜெகதீஸ்வரன், பிருந்தா முரளிகிருஷ்ணன், பாரதி குமரா, அமுதபிரியா, ரேணுகா சீனிவாசன், சாலமோன், ராஜேஸ்வரி சத்யா, ரமேஷ், வட்ட செயலாளர்கள் ஜேசுதாஸ், உலகநாதன், கே.ஆர்.ஜெகதீஸ்வரன், வேலவன், சரவணன், மாவட்ட பிரதிநிதிகள் வெள்ளைச்சாமி, ரமேஷ், பிரபாகரன், வேல்முருகன், அபிஷேக், ரமணா, ஜெயக்குமார், பெருமாள் காந்த், சதீஷ், பிரான்சிஸ், குருமூர்த்தி, தென்சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ஐயம்பெருமாள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.